அண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கும் சம்பளம்! இத்தனை கோடியா?

நடிகை நயன்தாரா தான் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. அவருக்கென்று தனியாக ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராகவே இருக்கிறார்கள்.

ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்காக அவர் 5.5 கோடி ருபாய் சம்பளமாக வாங்கியுள்ளார் என கூறப்பட்டது.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் மீண்டும் நயன்தாரா ரஜினியுடன் ஜோடிசேர்கிறார். இதில் நயன்தாரா சம்பளம் சற்று குறைத்து 4.5 கோடி ருபாய் தரப்படுகிறது.

இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!