விஜய்சேதுபதி படத்தில் இணைந்த சிம்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். விவேக், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘முருகா’ எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுல்தான் படத்திற்காக நடிகர் சிம்பு பாடிய ‘யாரையும் இவ்ளோ அழகா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இடம்பெறும் ‘முருகா’ பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!