பாலா-சூர்யா நீண்ட வருடங்களுக்கு பிறகு இணைந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டதா?

தமிழ் சினிமா முக்கியமாக கவனிக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் எல்லாம் வசூலிலும், விமர்சனத்திலும் பெரிய அளவில் ரீச் ஆனது.

கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் தான் சரியான வரவேற்பை பெறவில்லை.

சூர்யா-பாலா
சூர்யாவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது பிதாமகன், இப்படத்தை இயக்கிய பாலாவுடன் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளார் சூர்யா.

இப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் சில மனகசப்பு ஏற்பட படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மொத்தமாகவே படம் டிராப் ஆனது என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஆனால் சூர்யா தரப்பில் இப்போதைக்கு சின்ன இடைவேளை தான், பட கதையில் சில மாற்றங்கள் நடந்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்கின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!