புதிய அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது யுவன் கூறும்போது, நான் திரைத்துறையில் 25 ஆண்டுகள் கடந்தது பெரிய காரணம் ரசிகர்கள் தான். இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நான் அடுத்ததாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறேன். என்னுடைய ஒய்.எஸ்.ஆர் தயாரிப்பு நிறுவனம் மூலம், புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்த படத்தின் பணிகள் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் தொடங்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்க இருக்கிறேன்’ என்றார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!