ஜெயம் ரவியின் அடுத்த பட தலைப்பு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் அடுத்த பட தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘பூலோகம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் அடுத்ததாக ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘ஜே.ஆர் 28’ என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘அகிலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். விவேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். 

அகிலன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!