பிக்பாஸ் 5வது சீசன் வின்னர் ராஜுவிற்கு அடித்த லக்- இத்தனை பட வாய்ப்புகளா?

பிக்பாஸ் 5வது சீசனில் மக்களின் மனதை கொள்ளைகொண்டு ரூ. 50 லட்சம் பரிசு தொகையை தட்டிச் சென்றவர் ராஜு.

கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் சென்னை வந்து இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் பணிபுரிந்துள்ளார். அப்படி விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார்.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலும் கத்தி என்ற கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து வந்தார். மீண்டும் சீரியலில் கத்தி வேடத்தில் நடிக்க தொடங்கிவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸை விட்டு வெளியே வந்த ராஜுவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரிய  3 தயாரிப்பு நிறுவனங்கள் ராஜுவிற்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!