நடிகர் விக்ரம் மகன் துருவ் தூங்கும் போது சிலுமிஷம் செய்த நடிகை திரிஷா

சினிமாவில் வாரிசு நடிகர்கள் நுழைவது புதிய விஷயம் கிடையாது. மற்ற மொழிகளை விட பாலிவுட்டில் அப்படி நடிக்க வரும் பிரபலங்களை பார்க்கலாம்.

இப்போது தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் சியான் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது, படமும் அடுத்த மாதம் வெளியாகிறது.

பட புரொமோஷனுக்காக துருவ் பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் உங்களுக்கு பிடித்த நாயகி யார் என கேட்க அதற்கு அவர், எனக்கு சின்ன வயதில் இருந்தே திரிஷாவை பிடிக்கும், ஆனால் சந்தித்தது இல்லை. ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன், அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.