அண்ணாத்த இன்னும் நல்லா போயிருக்க வேண்டிய படம் ! – ரஜினி வெளியிட்ட பதிவு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த.

பெரிய எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படம் குறைவாகவே வசூல் செய்தது.
இதனிடையே இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது Hoote ஆப்பில் அண்ணாத்த திரைப்படம் குறித்து பேசியுள்ள ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார் ரஜினி.
அதில் இயக்குனர் சிவா குறித்தும் கொரோனா காரணமாக அண்ணாத்த ஷூட்டிங் தடைப்பட்டு போனது குறித்தும் பேசியுள்ளார்.

மேலும் “அண்ணாத்த வெளியான பின்பு விமர்சனங்கள் எல்லாம் சரியாக வரவில்லை, அத்துடன் அப்படம் வெளியாகி மூன்று நாட்களில் பயங்கரமாக மழை பெய்தது. படம் வெளியாகிய போது மழை பெய்திருந்தால் யார் வந்திருப்பார்கள் தியேட்டருக்கு, படம் நிச்சயம் தோல்வி அடைந்திருக்கும்” என கூறியுள்ளார்.

சிவா, கலாநிதி மாறன் நல்ல மனச-லா படம் நன்றாக போனது, மழை வரவில்லை என்றால் இன்னும் நல்லா போயிருக்கும். இதை எல்லாம் பாக்கும் போது பாட்ஷா பட டைலாக் தான் நியாபகம் வருது. நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான். ஆன கெட்டவங்கள! என சிரித்தபடி மாஸ்ஸாக பேசியுள்ளார் ரஜினி.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!