யார் படம் வந்தாலும் தல படத்துக்கு தான் எங்க ஷோ எல்லாமே, திரையரங்க உரிமையாளர் கருத்தால் பரபரப்பு

தமிழ் சினிமாவில் பண்டிகை என்றாலே பல படங்கள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் எனிமி படங்கள் திரைக்கு வந்தது.

தற்போது பொங்கல் விருந்தாக வலிமை படம் திரைக்கு வரவிருக்க, சன் பிக்சர்ஸ் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

இதனால், இரண்டு தரப்பு ரசிகர்களும் தற்போதே சண்டையில் இறங்கிவிட்டனர், ஒருவரை ஒருவர் தாக்கி டுவிட்டரில் ஒரு யுத்தமே நடந்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கு உரிமையாளர் ‘எந்த படம் வந்தாலும் எங்கள் தியேட்டரில் முதல் ஷோ வலிமைக்கு தான்’ என்று டுவிட் செய்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு சூர்யா, விஜய் ரசிகர்கள் கடுமையாக இதனால் மோதி வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!