கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் குவிந்து வருகின்றனர்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் புனித் ராஜ்குமார். பெங்களூருவில் வசித்து வரும் அவர், இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கர்நாடக முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு சென்று, புனித் ராஜ்குமார் உடல்நிலை குறித்து உறவினர்களிடம் கேட்டறிந்தார்.

நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள், அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன் குவிந்து வருவதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!