அமைதியாக விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா

நடிகை சமந்தா, நம்ம பல்லாவரத்து பொண்ணு என தமிழ் ரசிகர்கள் செல்லமாக கொண்டாடப்படுபவர்.

இவர் தெலுங்கில் படங்கள் நடிக்க அங்கு நடிகர் நாக சைத்தன்யா மீது காதல் வர சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் சமந்தா அக்கினேனி என கணவர் குடும்ப பெயரை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

ஆனால் திடீரென கணவர் குடும்ப பெயரை சமந்தா நீக்க, கணவரை பிரிகிறாரா, விவாகரத்து செய்யப்போகிறாரா என நிறைய சர்ச்சைகள் கிளம்பின.

அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தகவல்.

அதாவது சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் கோவாவில் பெரிய அளவில் ஒரு இடம் வாங்கியுள்ளனராம், அந்த இடத்தில் பெரிய Farm House கட்டும் வேலைகள் நடந்து வருகிறது என்கின்றனர்.

இருவரும் ஒன்றாக இந்த விஷயத்தை செய்ய விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!