மருத்துவரின் இறுதிச் சடங்குக்கு இடையூறு…. தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவு – கார்த்தி கண்டனம்

மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவு என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. மருத்துவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் கார்த்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘டாக்டர் சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தைதெரிவித்துக்கொள்கிறேன்’. இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!