பிரபல இயக்குனருடன் ஹாட்ரிக் கூட்டணி…. உறுதி செய்த நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்து அசத்தி இருந்தார். தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இதன்மூலம் நடிகை நயன்தாரா, இயக்குனர் மோகன் ராஜாவுடன் 3-வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!