தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள தெலுங்கு படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கூட்டணி உறுதியானால் மகேஷ் பாபுவுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படமாக இது அமையும். இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்களாம், அவற்றில் ஒன்றில் நயன்தாராவையும், மற்றொரு ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகையையும் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!