‘மனம் ரொம்ப வலிக்கிறது’ – நடிகை சமந்தா பரபரப்பு பேட்டி

சமீபத்தில் சமந்தா நடித்த ’தி பேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் வெளியானது என்பதும் இந்த தொடர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக சமந்தாவின் கேரக்டருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தனக்கு ஏற்பட்ட விமர்சனங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பரபரப்பாக சமந்தா பேசியுள்ளார்.

” சமூக வலைதளங்களில் சீண்டல்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயம் அல்ல என்றும் நெட்டிசன்கள் ஏதோ சொல்லிவிட்டு போகட்டும் என்று சும்மா இருக்க முடியவில்லை குறிப்பாக தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும்போது மனம் ரொம்ப வலிக்கிறது

பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருப்பதால் இது போன்ற சோதனைகளை எளிதாக கடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறிய சமந்தா, தன்னம்பிக்கை காரணமாகவே சமூகவலைத்தள சீண்டல்களை சமாளித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஒரு சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் “. சமந்தாவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!