ப்ளீஸ்.. அந்த மாதிரி செஞ்சுறாதீங்க..!! தமிழ் ராக்கர்ஸிடம் கெஞ்சும் பிரபல இயக்குனர்..!!


நாளை திரைக்கு வர இருக்கும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தை உடனடியாக தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டுவிட வேண்டாம் என்று அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் வேலைக்காரன் படம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன் ராஜா “இப்பொழுது எல்லாம் திரையரங்கில் ஒரு படம் ஒரு வாரம் ஓடுவதே பெரிய விஷயமாக உள்ளது.


போதாக்குறைக்கு தமிழ்ராக்கர்ஸ் வேறு தங்களது கடின உழைப்பை இதில் தான் காண்பிக்கிறார்கள், தூக்கத்தை தொலைத்து ஒவ்வொரு படத்தையும் வந்து உடனே வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் தான் உண்மையான வேலைக்காரன்,

உழைப்பை அவர்கள் மதிப்பதாக இருந்தால் வேலைக்காரன் படத்தை கொஞ்ச நாள் கழித்து ரிலீஸ் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!