திரைப்பட இயக்குனர் ஹரிக்கு கடும் காய்ச்சல் – மருத்துவமனையில் அனுமதி

சிங்கம், வேல், ஆறு, சாமி, பூஜை போன்ற படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் ஹரி, தற்போது கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறாராம்.

திரைப்பட இயக்குனர் ஹரி கடும் காய்ச்சலால் பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஹரி தற்போது அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக பழனியில் நடைபெற்று வந்தது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!