மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரபாஸ் படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் புதிய படத்தின் போஸ்டர் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராதே ஷியாம்’. இன்று மகா சிவராத்திரி புனித தினத்தை முன்னிட்டு சிவ-பார்வதியின் புராண காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராதே ஷியாம் படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்துள்ள இந்த காதல் கதையின் புதிய போஸ்டரில், இருவரும் வெவ்வேறு திசைகளை நோக்கியவாறு தரையில் படுத்துள்ளனர். இது படத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.

இத்தாலியில் உள்ள ரோம் உள்ளிட்ட மிகவும் அழகான இடங்களில் ‘ராதே ஷியாம்’ படமாக்கப்பட்டுள்ளது. பன்மொழிப் படமான ‘ராதே ஷியாம்’, ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், யூ வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் இதை தயாரித்துள்ளனர். இப்படம் இந்த வருடம் ஜூலை 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!