பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆர்யா நடிக்க வெளியான இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
படத்தில் நடித்த பலரின் கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரிய ரீச் ஆனது.
எல்லோருக்கும் என்ன ஆசை என்றால் படத்தின் 2ம் பாகம் வர வேண்டும் என்பது தான். இதுகுறித்து வந்த தகவல் என்றால், சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித்தும் ஒரு பேட்டியில், சார்பட்டா பரம்பரை பல காட்சிகளை சேர்க்க முடியவில்லை.
அந்த விஷயங்களை முன்வைத்து 1925ல் இருந்து கதை ஆரம்பிப்பது போல் எடுப்பதற்கு யோசித்து வைத்துள்ளதாக கூறி இருக்கிறார்.
இந்த செய்தி சார்பட்டா பரம்பரை பட ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!