அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது? – லேட்டஸ்ட் அப்டேட்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் ஆகியும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 15-ந் தேதி படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கியதற்கு பின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடத்த உள்ளார்களாம். அண்ணாத்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!