மீண்டும் பிரமாண்ட படத்தில் இணையும் பாகுபலி கூட்டணி.. கே.ஜி.எப் இயக்குனரின் அதிரடி திட்டம்..

ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் ராணா இருவரும் இணைந்து நடித்து இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் பாகுபலி.

இப்படத்தில் பிரபாஸ் மற்றும் ராணாவின் நடிப்பில் திரையுலகில் பாராட்டப்பட்டது. அதிலும் பிரபாஸுக்கு எதிரான ராணாவின் நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்த இருவரின் கூட்டணி புத்தம்புதிய பிரமாண்ட படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக ராணாவை நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறதாம்.

இதனால் தற்போது பிரபாஸ் மற்றும் ராணாவின் ரசிகர்கள் இந்த இருவரின் கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க அவளுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!