தெளலத் – விமர்சனம்

நடிகர் சக்தி சிவன்
நடிகை ரேஷ்மி கெளதம்
இயக்குனர் சக்தி சிவன்
இசை இமாலயன்
ஓளிப்பதிவு மெய்யப்பன்
ஆதரவற்றவரான நாயகன் சஞ்சய் சிவன் பெங்களூரில் தாதாவாக இருக்கும் ஆடுகளம் ஜெயபாலனுடன் அடியாளாக வேலைபார்த்து வருகிறார். நாயகன் தன் குழுவினருடன் ஒரு எம்எல்ஏவை கொல்வதற்காக திட்டம் போடுகிறார்.

இதேசமயம் தமிழ்நாட்டில் தாதாவாக இருக்கும் யோக் ஜாபி, போதைப் பொருள் ஒன்றை கைப்பற்றுவதற்காக பெங்களூர் செல்கிறார். அப்போது சஞ்சய் சிவன் தன் குழுவினருடன் எம்எல்ஏவை கொல்வதற்கு பதிலாக யோக் ஜாபியைக் கொண்டு விடுகிறார்கள். இதனால் கோபம் அடையும் யோக் ஜாபியின் கும்பல், சஞ்சய் சிவன் மற்றும் அவரது கும்பலை கொல்ல முயற்சி செய்கிறார்கள்.

இறுதியில் நாயகன் சஞ்சய் சிவன், யோக் ஜாபியின் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சய் சிவன் ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார். நல்ல கதையை எடுத்துக் கொண்ட சக்தி சிவன் திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார். போதைப்பொருள், தாதா கும்பல் இவற்றை சுற்றிய படத்தை உருவாக்கியிருக்கிறார். சொல்லவந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மி கவுதம் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் தாதாவாக வரும் யோக் ஜாபி, பெங்களூரு தாதாவாக வரும் ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காமெடி கதாபாத்திரத்தில் வரும் யோகிபாபு பத்து நிமிடம் மட்டுமே வருகிறார். இன்னும் அதிக காட்சிகள் நடித்திருந்தால் ரசித்திருக்கலாம்.

இமாலயன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். மெய்யப்பனின் ஒளிப்பதிவு அதிகம் ஜொலிக்கவில்லை.

மொத்தத்தில் ‘தௌலத்’ ஈர்ப்பு இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!