நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் அந்த நபரின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..?


1994 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நாட்டாமை. கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் கலக்கியது.

நாட்டாமை என்றாலே கவுண்டமணி செந்தில் காமெடிதான் நமக்கு நினைவுக்கு வரும்.

நாட்டாமை படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அப்போது கவுண்டமணி.., ஏண்டா.., இங்க இவ்வுளவு பெரிய அமளி துமளி நடந்துகிட்டு இருக்கு ..? நீ மிக்ஸர் சாப்டுகிட்டு இருக்கியே என்று கலாய்த்து எடுப்பார்.


அந்த சீனில் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்த நபர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார், எப்படி அந்த ரோலுக்கு செட் ஆனார் தெரியுமா.?

இது குறித்து இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் கூறியதாவது:-

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நாட்டாமை படத்தின் சூட்டிங்கின் போது, பெண்ணின் அப்பா கேரக்டருக்கு சரியான ஒரு ஆளை தேடி வந்தோம். ஆனால், அப்போது யாரும் கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில், எங்களது படக்குழுவில் லைட் மேனாக வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் அந்த வேடத்திற்கு சரியாக இருப்பார் என்று நான் நினைத்தேன்.


அவருக்கு லைட் சுவிட்ச் போடுவது மற்றும் ஆப் செய்வது இரண்டு மட்டுமே வேலை. அவரிடம் சென்று வாங்க நடிக்கலாம் என நான் கூப்பிட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்து விட்டார்.

சார்., எனக்கு நடிக்க தெரியாது என்று கூறினார். நான் தான் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன். அந்த சீனுக்கு கணக்கச்சிதமாக அவர் செட் ஆகிவிட்டார்.

அது வரைக்கும் அவரை செட்டில் மாமா என்று கூப்பிட்டு வந்த பலர் அந்த சீனுக்கு பிறகு மிக்ஸர் மாமா என கூப்பிட ஆரம்பித்துவிட்டனர் என்று கே.எஸ் ரவிக்குமார் கூறினார்.

அந்த நபரை பற்றி விசாரிக்கும் போது., தற்போது லைட் மேன் பணியை விட்டுவிட்டு சென்னை கே.கே நகரின் உள்ள பார்க்கில் சுண்டல் பொறி கடலை விற்று வருகிறார் என்கின்ற தகவல் கிடைத்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!