சூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான்! எதிர்பாராத ட்விஸ்ட் – முக்கிய நபர் கூறியது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் வேலைகள் சிவா இயக்கத்தில் நடைபெற்று வருகின்றன. ரஜினியும் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. ரஜினி ஏற்கனவே தன் அரசியல் நிலைப்பாட்டை செய்தியாளர்களை மண்டபடத்தில் திரட்டி அறிவித்து விட்டார்.

மாற்றங்களை நாம் எல்லோரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும், பதவியில் நான் இருக்கப்போவதில்லை என்றெல்லாம் கூறினார். ஆனால் அவரின் மீதான அரசியல் எதிர்ப்பார்ப்பு இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் 70 வது பிறந்தநாளையொட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நலப்பணிகள் செய்துவரப்படுகிறது.

சென்னை தாம்பரம் அஸ்தினாபுரம் பகுதியில் 2000 மரக்கன்றுகளை வழங்கும் பணி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர்.ஜெயகிருஷ்ணன் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்து இருக்கின்றோம். ரஜினிகாந்தை விமர்சிப்பவர்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை என பேட்டியளித்துள்ளார்.

இது பலருக்கும் டிவிஸ்ட் போல அமைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!