தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன், அண்மையில் இவரும் சூர்யா தேவி என்பவரும் வனிதாவின் திருமணத்திற்கு எதிராக பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக நாஞ்சில் விஜயன் தனது தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சூர்யா தேவி கையில் பேட் உடன் நான்கு அடியாட்களை வைத்து கொண்டு அவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இதை சுதாரித்து கொண்டு தப்பி ஓடிய நாஞ்சில் விஜயனை ஆட்டோவில் வைத்து நான்கு அடியாட்கள், அவரை அடித்துள்ளனர்.
மேலும் சூர்யா தேவி வீட்டின் உள்ளே சென்று நாஞ்சில் விஜயனின் அம்மா, அக்காவை அடித்தது மட்டுமின்றி வீட்டில் உள்ள பொருட்களையும் உடைத்துள்ளார். இவ்வாறு எல்லாம் நடந்தகாக நாஞ்சில் விஜயனின் அக்காவான ரேனுகா தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!