அந்த கதாபாத்திரத்தில் மட்டும் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் – நடிகை ஜெனிலியா முடிவு

பாய்ஸ், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தனர் நடிகை ஜெனிலியா. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

பாலிவுட் நடிகரான Riteish Deshmukh என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் Riaan Deshmukh மற்றும் Rahyl Deshmukh என இரு ஆண் பிள்ளைகள் உள்ளன.

திருமணத்திற்கு பின்பு பல பட வாய்ப்புகள் தன்னை தேடி வந்தும், நடிக்க மறுத்துவிட்டார். ஆனால் தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்க வருகிறாராம் நடிகை ஜெலிலியா.

இதனை குறித்து பேசியுள்ளார் :

” திருமணத்திற்கு பின்பு கணவருடன் நேரத்தை செலவிட நினைத்தேன். அதன்பின் குழந்தைகள் பிறந்தன அதனால் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு நடிக்க வந்தால் என் எண்ணம் நடிப்பில் இருக்காது. ஆனால் தற்ப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். இதனால் மீண்டும் திரையுலகில் நடிக்க வருகிறேன். கண்டிப்பாக அம்மா கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் ” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!