விஜய் தேவரகொண்டா பெயரை சொல்லி மோசடி – நூலிழையில் தப்பிய முன்னணி நடிகை

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா அளவில் பிரபலமானவர்.

இவர் கடந்த வாரம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “என் பெயரை பெயரை பயன்படுத்தி, என்னோடு நடிக்க வைப்பதாக சொல்லி, சில மோசடி தயாரிப்பு நிறுவனங்கள் நடிகைகளிடம் அணுகுகிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இதனை குறித்து நடிகை ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அதில் : ” தயாரிப்பாளர் என சொல்லி ஒருவர் என்னை அணுகினார். அவர் ஒரு வெப் சீரிஸ் தயாரிக்க இருப்பதாகவும், அதில் விஜய் தேவரகொண்டாவிற்கு நான் ஜோடியாக நடிக்க வேண்டும் என சொன்னார் “.

“அதற்கு நான் முதலில் கதை கேட்க வேண்டும் என்று சொன்னேன். இயக்குனரை கதை சொல்ல அனுப்புவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு பல நாட்கள் ஆகியும் அவர் வரவே இல்லை. நான் விசாரித்து பார்த்ததில் அப்படி ஒரு தயாரிப்பாளரும், அப்படியொரு நிறுவனமும் கிடையாது என தெரியவந்தது”.

பெண் நடிகைகளை எப்படியும் ஏமாற்றி விடலாம் என தான் அலைகிறார்கள். இதுபோன்ற மோசடி செய்பவர்களிடம், பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!