காதலரை கரம் பிடித்த கவர்ச்சி நடிகை… ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என உருக்கம்

சர்ச்சைகளுக்கு பெயர்போன பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில், தற்போது ஊரடங்கை மீறியதாக பூனம் பாண்டே கைது செய்யப்பட்டார்.

பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது பூனம் பாண்டே – சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!