வேண்டாம் என சூர்யா நிராகரித்த படம்! ஓகே சொன்ன நடிகை – மறக்க முடியாத நிகழ்வு

சூர்யாவின் சூரரை போற்று படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தியேட்டரில் வெளியாக வேண்டிய இப்படம் கொரோனாவால் தள்ளிப்போடப்பட்டதால் ஓடிடி தளத்தில் வெளியிடப்படுவது அதிகாரப்பூர்வமானது.

இதனால் கடும் எதிர்ப்பு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் அவருக்கு எழுந்தது.

விமர்சனங்களை அமைதியாக எதிர்கொள்ளும் சூர்யா இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் சிலவற்றை சினிமா சங்கங்களுக்கு தானமாக வழங்கினார்.

பல வெற்றி தோல்விகளை கண்ட சூர்யாவின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் சில்லுனு ஒரு காதல்.

இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இதை சூர்யாவிடம் கூறியது போது குழந்தைக்கு அப்பாவாக நடித்தால் படம் பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என கூறி சாரி வேற படம் செய்யலாம் என கூறிவிட்டாராம்.

மாதவன் என பல நடிகர்களும் இக்கதையை ரிஜெக்ட் செய்து பின் கௌதம் மேனனிடம் செல்ல குந்தவை கேரக்டருக்கு இயக்குனர் நினைத்தது போலவே ஜோதிகா சந்திக்க அவரும் யார் ஹீரோவாக நடித்தாலும் பரவாயில்லை. நான் நடிக்கிறேன் என கூறிவிட்டாராம்.

பின் காலப்போக்கில் சூர்யாவிடம் செல்ல அவரும் ஓகே சொல்ல படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றதாம்.

இப்படத்தில் இரண்டு பாடல்களை ஷூட்டிங் எடுத்த பின்னர் தான் ஹீரோ அமைந்தாராம்.

முதலில் இப்படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்து பின்னர் ஞானவேல்ராஜா தயாரித்தாராம்.

அத்துடன் ஹீரோ பற்றி கேட்காமலயே ரஹ்மானும் ஓகே சொல்லி இசையமைத்து கொடுத்துவிட்டாராம்.

அதே வேளையில் ஐஸ்வர்யா வேடத்தில் நடிக்க முக்கிய நடிகைகளை அணுகிய போது பலரும் மறுக்க கடைசியில் பூமிகா ஓகே சொல்லிவிட்டாராம்.

இப்படத்தின் வடிவேலு காமெடி காட்சிகளை பொறுத்தமில்லாதது என பலரும் விமர்சிக்க அக்காட்சி பின்னர் படத்திற்கு கூடுதலான சிறப்பை ஏற்படுத்தியதாம்.

இப்படம் வெளியாகி 14 ஆண்டுகளை எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!