விஜய்க்கு தைரியம் இல்லை, திருமுகன் காந்தி ஓபன் டாக்


விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மெர்சல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்ட ஜிஎஸ்டி வசனத்தால் பலரும் எதிர்க்க, படத்திற்கு அதுவே பெரிய விளம்பரமாக அமைந்தது.


இந்நிலையில் மே 17 இயக்கத்தை சார்ந்த திருமுருகன் காந்தி இதுக்குறித்து பேசும் போது ‘விஜய் உண்மையாகவே ஜிஎஸ்டியால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று நினைத்திருந்தால், முதல் குரல் அவருடையதாக தான் இருக்க வேண்டும்.


ஒரு கலைஞனுக்கு உள்ள ஆளுமை என்பது அரசு அவர்களை அடக்கும் போது அதை மீறி, இது தான் உண்மை என்று சொல்ல வேண்டும்.


ஆனால், அப்படி ஒரு தைரியத்தை விஜய்யிடம் நான் பார்க்கவில்லை, அது மனதிற்கு வருத்தமாக உள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!