தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த்- கைது செய்யப்பட்ட அவரது காதலி

பாலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சுஷாந்த். கிரிக்கெட் வீரர் தோணியின் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும் பரீசயமான முகமாக மாறினார்.

அதன்பிறகு அவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்து வந்தார். ஹிட் என்று சொல்லும் படி இல்லை என்றாலும் நஷ்டம் இல்லை என்ற அளவிற்கு அவரது படங்கள் இதுவரை ஓடியிருக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் அவர் திடீரென தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை.

சந்தேக பெயரில் அவரது முன்னாள் காதலி ரியா மும்பை, பீகார் போலீஸ், CBI குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். கடந்த 3 நாட்களாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் ரியா சில நிகழ்ச்சிகளில் போதை மருந்து பயன்படுத்தி இருப்பதாக ஒப்புக் கொண்டதாகவும் இதனால் அவரை கைது செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!