முத்தக்காட்சியில் நடிக்க சொல்லி மிரட்டிய படக்குழு- அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை சமீரா ரெட்டி

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் ஒரு கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி.

இதன்பின் நடுநிசி நாய்கள், வெடி, அசல் என பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி என்றும் பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்த பிரபலமானார் சமீரா.

இந்நிலையில் பாலிவுட் படம் ஒன்றில் நடித்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து நடிகை சமீரா ரெட்டி மனம் திறந்துள்ளார்.

இதில் அவர் கூறியதாவது: பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் சொன்னார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.

நீங்க ஏற்கனவே முசாபிர் எனும் ஹிந்தி படத்தில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறீர்களே, அதே போல் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். அந்த விஷயம் எனக்கு மிகவும் மன வேதனையை தந்தது.

ஒரு படத்தில் செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் நீங்கள் இப்படத்தில் இருந்து விலகப்படுவீர்கள் என கூறினார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!