விஜய் ரசிகர்கள் செய்த வெறிச்செயல்.. அநியாயமாக பறிப்போன உயிர்..!!


சர்கார் பட பேனரை கிழித்த நபர் ஒருவர் வீட்டினுள் மர்மமான முறையில் இறந்து கிடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான மணிகண்டன் என்பவர் கால்டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

சர்கார் படம் நேற்று வெளியானதையொட்டி மணிகண்டனின் வீட்டின் முன்பு விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்டுவிட்டு தன் வீட்டின் முன்னர் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்துள்ளார் மணிகண்டன்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் பத்து பேர் சேர்ந்து கொண்டு மணிகண்டனை தாக்கியுள்ளனர்.

உறவினர்கள் மணிகண்டனை தாக்கும் விஜய் ரசிகர்களிடம் இருந்து மீட்டு, வீட்டுக்குள் தள்ளி வெளியில் பூட்டி அவரை காப்பாற்றினர்.

இதனை தொடர்ந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் மணிகண்டன் வீட்டின் முன்பு குவிந்தனர். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து வீட்டை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது மணிகண்டன் தூக்கில் மர்மமான முறையில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து தாங்கள் வீட்டை சூழ்ந்திருந்த விஜய் இரசிகர்களை சமாளித்து கொண்டிருந்த நேரத்தில், சிலர் உள்ளே புகுந்து மணிகண்டனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

மணிகண்டன் இறந்த விவரத்தை அறிந்த உடனே அங்கு கூட்டமாக சூழ்ந்திருந்த விஜய் இரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணிகண்டன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது பூட்டியிருந்த கதவைத் திறந்து மணிகண்டனை அடித்துக்கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!