தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகைn நயன்தாரா.
இவர் தற்போது சோலோ ஹீரோயினாக சமீபகாலமாக நடித்து மிரட்டி வருகிறார். மேலும் தற்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை மிகவும் தீவிரமாக காதலித்து வருகிறது என்பது அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் பதிவுகளை உறுதி செய்யும்.
சமீபத்தில் கூட நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டப்படி புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற போகிறதாம்.
இதற்காக இன்னும் சில நாட்களில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரபல கோவில் ஒன்றுக்கு ஆன்மிக பயணம் செல்ல போகிறார்களாம்.
இந்த ஆன்மிக பயணம் முடிந்து பிறகு இருவரும் திருமணம் நடைபெறும் என நயன்தாராவின் நெருங்கிய ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக இந்த செய்தி பரவி வருகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!