தமிழ் சினிமா டாப் நடிகரின் பட வாய்ப்பை 4 முறை வேண்டாம் என்று ஒதுக்கிய முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய்.. காரணம் என்ன?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் தமிழில் வெளிவந்த இருவர் எனும் படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஆம் மணிரத்னம் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்து வெளிவந்த இருவர் படம் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு முதல் திரைப்படம்.

இதன்பின் தான் பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க துவங்கினார். மேலும் தமிழில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ஜீன்ஸ் படத்தில் மீண்டும் தமிழில் நடித்தார்.

இதனை தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

மேலும் இவர் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆராதியா எனும் பெண் குழந்தை வுள்ளது.

சமீபத்தில் கூட அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராதிய என குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் ஐஸ்வர்யா ராய்யும் அவரின் மகளும் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் திரையுலகின் டாப் நடிகரின் பட வாய்ப்பை 4 முறை வேண்டாம் என்று நிராகரித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் அந்த நடிகர் யார் என்றால் தமிழ் திரையுலகின் வசூல் மன்னனாக திகழ்ந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பட வாய்ப்பை தான் 4 முறை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!