சீரியலில் இறங்கும் யாஷிகா ஆனந்த்! இனி அந்த நடிகைக்கு பதிலாக இவர் தான் – எந்த சீரியலில் தெரியுமா

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடக்கத்தில் இவர் கவர்ச்சி நடிகை போல படத்தில் காண்பிக்கப்பட்டார்.

பட வாய்ப்புகள் பெரிதும் அமையாததால் சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.

பின் பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார். தற்போது கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர் ரோஜா சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்து வந்த பிரியா நல்கரிக்கு பதிலாக யாஷிகா நடிக்கிறாராம்.

இதனால் ரசிகர்கள் அவரை சின்னத்திரையில் காணும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!