முதல் முறையாக தென்னிந்திய சினிமாவில் சமந்தாவுக்கு கிடைக்கும் பெருமை..!!


சமந்தா நடித்த 3 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னும் முன்னணி நடிகையாகவே திகழ்கிறார்.

அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான `இரும்புத்திரை’, `நடிகையர் திலகம்’ ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் வெளியானது.


அதுபோல சமந்தா நடித்த 3 படங்கள் அடுத்த மாதம் ஒரே நாளில் ரிலீசாக இருக்கிறது.

சமந்தா சிவகார்த்திகேயனுடன் நடித்த `சீமராஜா’ படம் செப்டம்பர் 13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருக்கிறது. அதே நாளில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்த `யு டர்ன்’ படமும் வெளியாகிறது. இந்த பட்டியலில் இப்போது நெஞ்சமெல்லாம் பல வண்ணம் படம் சேர்ந்து இருக்கிறது.


சமந்தா, மகேஷ்பாபு, வெங்கடேஷ், அஞ்சலி நடித்த `சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு’ என்ற படம் தமிழில் டப் ஆகிறது. படத்தை ரோல்ஸ் பிரைட் நிறுவனம் சார்பில் மெகபூ பாஷா தயாரித்து இருக்கிறார். ஆக, தென் இந்திய நடிகைகளில் முதன்முறையாக ஒரு நடிகையின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன. சமந்தா இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!