துப்பாக்கி பார்ட் 2க்காக காத்திருக்கும் சந்தோஷ் சிவன்!

விஜய் நடிப்பில் வந்த துப்பாக்கி படத்தின் 2ம் பாகத்திற்காக காத்திருப்பதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் பேசியதற்கு பலரும் விமர்சனம் செய்த நிலையில், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து, துப்பாக்கி படத்தின் 2 ஆம் பாகத்திற்காக தான் காத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த துப்பாக்கி படத்திற்கு சந்தோஷ் சிவன் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், தளபதி 64 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், விஜய்யின் பிகில் படம் உலகம் முழுவதும் வெளியானது.

கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் இப்படம் தமிழகத்தில் ரூ.25 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தெலுங்கில் 4.10 கோடியும், கர்நாடகாவில் ரூ.4 கோடியும், கேரளாவில் ரூ.4.70 கோடியும், மற்ற மாநிலங்களில் ரூ.1.50 கோடியும், வெளிநாடுகளில் ரூ.22.33 கோடி வரையிலும் வசூல் குவித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் பிகில் ரூ.61.63 கோடி வரையில் வசூல் குவித்து கோலிவுட்டில் அதிக வசூல் குவித்த படங்களில் பிகில் 4 ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்தின் 2.0 முதல் இடத்திலும், கபாலி 2 ஆம் இடத்திலும், சர்கார் 3 ஆம் இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!