இப்படியொரு வேலையை செய்துடாங்களே சமந்தா..!! வைரலாகிய புகைப்படம் உள்ளே..!!


தமிழில் முன்னணியில் இருந்த நடிகை சமந்தா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மார்க்கெட் சரிந்த பிறகு தான் நடிகைகள் திருமணத்தை பற்றியே யோசிப்பார்கள். ஆனால், மார்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். திருமணமான பிறகும் படவாய்ப்பு வருவதால் தொடர்ந்து நடித்து வருகிறார் சம்மு.

விஷாலுடன் இரும்புத்திரை மற்றும் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் என அம்மணி இப்போதும் கோலிவுட்டில் பிஸியாக உள்ளார். மேலும், தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் “ரங்கஸ்தலம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.


80 களில் நடக்கும் கதையை கொண்ட இந்த படத்தில் தாவணி பாவாடை கட்டிக்கொண்டு கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் நடிகை சமந்தா.

இந்த படத்தில் மேக்கப் போடாமல் நடித்திருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளன. “ரங்கஸ்தலம்” படத்தில் அந்த காலத்து மோட்டாருக்கு டீசல் ஊற்றுவது. எருமை மாடு மேய்ப்பது போன்ற புகைபடங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!