அப்போது சும்மா இருந்துவிட்டு தற்போதுள்ள நாடகமாடாதீர்கள், சுஷாந்த் மரணத்திற்கு பிரபல இயக்குனர் கடுமையான கருத்து…

சுஷாந்த் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லோரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் இந்த நிலைக்கு காரணம் பலரும் பாலிவுட்டில் நடக்கும் நெப்பிடியூசம் தான் என்கின்றனர்.

அப்படியென்றால் பெரிய நடிகர், நடிகை, இயக்குனர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் சினிமாவில் நடிக்க வைப்பார்கள்.

தானாக வருபவர்களை நசுக்குவார்கள், அப்படித்தான் சுஷாந்தை செய்துவிட்டனர் என கூறுகின்றனர்.

அதில் பாலிவுட் இயக்குனர் அபினவ் ‘அவர் இருக்கும் போது, எந்த ஒரு ஆதரவும் தராமல், தற்போது உட்கார்ந்து ஆறுதல் என்ற பெயரில் போலிக்கண்ணீர் வடிக்காதீர்கள்’ என்று கடுமையாக திட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!