பிரபல இயக்குனரின் காதல் சுவாரஷ்யம்..!! யார் காரணம் தெரியுமா..?


ராஜா ராணி, தெறி, மெர்சல் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தற்போது வீட்டில் மனைவி ப்ரியாவுடன் ஓய்வு எடுத்து வருகிறார் இயக்குனர் அட்லீ.

கடந்த 2014ஆம் ஆண்டு அட்லீ மற்றும் அவரது காதலி ப்ரியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதலித்து பெற்றோரால் நிச்சியிக்கப்பட்ட திருமணம்.

இயக்குனர் அட்லீக்கும் ப்ரியாவிற்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பதை பற்றி இதில் பார்க்கலாம் வாங்க..

அட்லீ மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அப்போது சிவகார்த்திகேயன் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் ப்ரியாவும் இருந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த நேரத்தில் சிவாவை பார்க்க அட்லீ வந்த போது ப்ரியாவை பார்த்ததும் இம்ப்ரெஸ் ஆகியிருக்கிறார்.


ஆனால்.., பிரியாவிடம் அட்லீ பேசுவதற்கு பதிலாக., இரண்டு வீட்டாரையும் பேச வைத்து பேமலி பிரண்ட்ஸ் ஆகிவிட., இருவருக்கும் நட்பு ஆரம்பித்தது. அதன் பின்னர், கிட்டத்தட்ட 8 வருடங்கள் இந்த நட்பு நீடித்துள்ளது.

அந்த நேரத்தில் ப்ரியாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர். நண்பர்கள் அனைவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது ப்ரியா இந்த விஷயத்தை பற்றி கூறியுள்ளார்.

அது போக ஜாதகத்தினால் மாப்பிள்ளை அமையவில்லை எனவும் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

உடனடியாக சுதாரித்த அட்லீ, இதற்கு மேல் போனால் கை நழுவி விடும் என கருதி அனைவரின் முன்னிலையிலும் ‘நான் வேண்டுமானால் என்னோட ஜாதகத்த தரட்டுமா?’ என சரியான நேரத்தில் கோல் போட்டுள்ளார்.


அப்போது சிரித்து விட்டு விளையாடாதடா எனக் கூறிவிட்டு சென்றுள்ளார் ப்ரியா.

ஆனால், வீட்டுக்கு சென்று அட்லீக்கு போன் செய்து, உண்மையாதான் அப்படி கேட்டயா? எனக் கேட்க. ஆம், என அட்லீ கூற, வீட்டில ஜாதகம் பரிமாற பின்னர் 2014ல் சென்னையில் பிரபல ஹோட்டலில் திருமணம் முடிந்துவிட்டது.

இப்போது தான் தெரிகிறது அட்லீ எப்படி ராஜா ராணி கதையை எழுதினார் என்று…

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!