ஊரடங்கு முடிந்த பிறகு இப்படித்தான் ஆடுவேன்…. ரஜினி பட நடிகை

ஊரடங்கு முடிந்துவிட்டது என்று சொன்னால், நான் இப்படிதான் ஆடுவேன் என்று ரஜினி பட நடிகை கூறியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ”இந்த ஊரடங்கு முடிந்துவிட்டது என்று சொன்னால், நான் இப்படிதான் ஆடுவேன். எப்போது அந்த கால் வருமோ..?!” என பதிவிட்டுள்ள அவர், அதற்கு ரொம்பவே ஜாலியாக ஆடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். ஹூமா குரேஷியின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!