பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது விஜயுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக பலருடைய இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பணமில்லாமல் பசியோடு பலரும் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!! என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!