ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் 10 பாம்புகள்

சமீபத்தில் நடந்த விழாவில் ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் 10 பாம்புகள் பிடிபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, ‘தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை பார்த்ததாகவும் கோவில்களுக்கு செலவழிப்பது போல மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கும் செலவு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஜோதிகாவின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் ஜோதிகா புகார் கூறிய அரசு மருத்துவமனையில் நேற்று 5 விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகள் பிடிபட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுற்றித்திரிந்த தகவல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!