இறந்த நடிகர் இர்பான் கானின் கடைசி ஆசையும் நிறைவேறவில்லை! வருத்தமான செய்தி

கொரோனா நோயால் உலகம் முழுக்க 31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் 2.18 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். தினமும் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஊரடங்கால் பல பேர் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்துள்ளனர். சினிமா பிரபலங்களும் இதில் அடங்குவர்.

அண்மையில் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் இர்ஃபான் கானின் தாயார் உடல் நலக்குறைவால் ஜெய்ய்பூரில் காலமானார். ஆனால் இர்பான் ஊரடங்கால் முன்பையில்ம் மாட்டிக்கொண்டதால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பார்த்து அழுதார்.

இந்நிலையில் இர்ஃபான் உடல் நலக்குறைவால் மும்பையில் உள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.

ஆனால், அவர் தன் கடைசி ஆசையான தன் அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் போனது எல்லாருக்கும் வருத்தம் தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!