கொரோனா, கடவுள் நமக்கு வச்ச பரீட்சை…. எல்லாரும் பாஸ் ஆயிடுங்க – வடிவேலு

கொரோனா என்பது கடவுள் நமக்கு வச்ச பரீட்சை, அதில் அனைவரும் பாஸ் ஆயிடுங்க என நடிகர் வடிவேலு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருப்பதாவது: “என்னமோ நடக்குது இங்கே. கடவுள் இறங்கி விட்டான். எல்லோரையும் சோதிக்கிறான். இந்த சோதனையில் நமக்கு பரீட்சை வைத்து இருக்கிறான். இதில் எல்லோரும் பாசாகி விட வேண்டும். போலீசார் வேண்டுமென்று யாரையும் அடிக்கவில்லை. அடித்தால் வீட்டில் இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். எங்கே போகிறாய் என்று கேட்கும்போது சரியான காரணம் சொன்னால் வெளியே விடுகிறார்கள்.

நம்மை காப்பாற்றத்தான் அடிக்கிறார்கள். உங்களை வீட்டில் உட்கார வைத்து நாங்கள் உயிரையெல்லாம் பணயம் வைத்து தெருவில் நிற்கிறோம் என்று அந்த போலீசெல்லாம் சேர்ந்து நமக்கு உதவி செய்கிறார்கள். கலவரம் நடந்தால்தானே தடியடி நடக்கும். இப்போது உயிரை காப்பாற்ற தடியடி நடத்த வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை. ரெண்டு தட்டு தட்டினால்தான் போவான். கவனமாக இருங்கள், கடவுளை கும்பிடுங்கள். இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!