காவல்துறையினருக்கு பாதுகாப்பு முகமூடிகளை வழங்கிய மெட்ரோ சிரிஷ்

சென்னை காவல்துறையினருக்கு ‪குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு முகமூடிகளை விநியோகம் செய்தார் நடிகர் “மெட்ரோ” சிரிஷ் .

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

காவல்துறையினர், மருத்துவர்கள், ஊடகத்துறையினர் ஆகியோர் மற்றும் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் மெட்ரோ சிரிஷ், காவல்துறையினருக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு முகமூடிகளை விநியோகம் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!