ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன நடிகை நஸ்ரியா – வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!

முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. ஆனால் தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படத்தில் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

View this post on Instagram

Brotherrr❤

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh._) on

நடிகை நஸ்ரியா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வருகிறார். தற்போது தனது முடியை குட்டையாக வெட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் நடிகை நஸ்ரியாவா இது என வியந்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.