“மிஷ்கின் மீது எங்களுக்கு நம்பிகை உள்ளது” – நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்

இயக்குனர் மிஷ்கின் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே அவருக்கேன ஒரு தணி பாணியில் இயக்கியிருப்பார்.

மேலும், நடிகர் விஷாலை வைத்து இயக்கிய துப்பரிவாளன் திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி கொண்டிருந்த மிஷ்கின், திடீரென்று அப்படத்திலிருந்து விலகினார்.

அதன்பின் இப்படத்தை நடிகர் விஷால் இயக்குவதாகவும், இயக்குனர் மிஷ்கின் குறித்து சில திடுக்கிடும் குற்றச்சாட்டையும், மிஷ்கினை வைத்து எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் படம் தயாரிக்க கூடாது என விஷால் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிந்தார்.

இந்நிலையில் விஷாலின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் டுவிட் ஒன்றை போட்டுள்ளது. இதில் “நாங்கள் மிஷ்கின் சாரையும், அவரின் கதையும் நம்பிகிறோம். மேலும், அவருடன் இணைந்து படம் தயாரிக்க தாயராக உள்ளோம்” என பதிவிட்டுள்ளனர்.

மேலும் இது நடிகர் விஷாலுக்கு மிக பெரிய பதிலடியாக இருக்கும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!