‘அம்மா’ போன பிறகு தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை: மீரா மிதுன் குமுறல்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுனை சமூக வலைதளங்களில் பலர் ஃபுல் டைமாக விளாசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தமிழ்நாடே வேண்டாம் என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு மும்பைக்கு சென்றுவிட்டார்.

மும்பையில் தங்கி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தப் போகிறாராம். தமிழகத்தில் உள்ள திறமையான, அழகான நடிகைகளில் ஒருவராக இருந்தும் கூட தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்று மீரா புகார் தெரிவித்துள்ளார்.

ஃபேஷன் துறையிலும் தமிழகத்தில் தனக்கு எதிராக ஒரு கும்பலே இருப்பதாக கூறுகிறார் மீரா. இப்படி திடீர் என்று மும்பையில் செட்டில் ஆகிவிட்டீர்களே என்று மீராவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதா மேடம் இறந்த பிறகு தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுவிட்டது. அவர் இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மீரா மிதுன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறும் திறமைசாலி நான் என்கிறார் மீரா.

நிஜத்தில் யாரும் தன்னை வெறுக்கவில்லை என்றும், ஆன்லைனில் முகம் தெரியாதவர்கள் தான் வெறுப்பதாகவும் கூறுகிறார் மீரா. இதற்கிடையே மீராவுக்கு மறுமணம் நடக்கப் போவதாக பேச்சு எழுந்தது. அதை அவரும் உறுதி செய்துள்ளார்.

மீரா தயவு செய்து திரும்பி வந்துவிடாதீர்கள், மும்பையிலேயே இருங்க என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!